Motilal oswal என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சில் (2008 -2013) சந்தை மதிப்பை அதிக படுத்திய
பட்டியலை வெளியட்டுள்ளனர் .இதில் மிக அதிகமாக /வேகமாக/மற்றும் நிலையான செல்வத்தை பெருகியதற்கான பட்டியல் கிழே கொடுத்துள்ளேன்.
அதிக லாபத்தை ஏற்படுத்திய பட்டியல் :
இந்த ஆராய்சி ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் வெளிஇடப்படும் .
இதில்
asian paints ,itc ,hdfc போன்ற பங்குகள் ஒவ்வொரு வருடமும் இதில்
இடம் பிடித்துள்ளன . இப்போதும் இந்த பங்குகளை விலை குறையும் போது நாம்
வாங்கி வந்தால் 2-3 வருடத்தில் சிறந்த பலனை (20 % அதிகமான )எதிர்
பார்க்கலாம் . அதிக நஷ்டத்தை ஏற்படுத்திய பட்டியல் :
இதில் பொது துறை நிறுவனங்கள் ,அம்பானி சகோதரர்கள் ஆகியவற்றின் பங்குகள் தான் கடும் சரிவை சந்தித்துள்ளன .
கடந்த 10 வருடத்தில் அதிக லாபம்/நஷ்டம் அடைந்த துறைகள் :
தனித்துவமான உத்திகள் மூலம் திறமையாக செயல்படும் 5 நிறுவனங்கள் :
தங்கள் துறைகளில் அதிக சந்தை மதிப்பு/ மற்றும் மற்ற நிறுவனங்களுக்கு முன்னோடியாக இருக்கும் நிறுவனங்கள் :
தங்கள் தொழிலில் இருந்து மாறி லாபம் சம்பாதித்த சிறந்த 5 நிறுவனங்கள் :
அடுத்து,புதிதாக அதிக சந்தை மதிப்பை உருவாக்கபோகும் நிறுவனகள்:
அடுத்து,புதிதாக நிரந்தரமான/நிலையான சந்தை மதிப்பை தரப்போகும் நிறுவனகள்:
இநத பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். .
இந்த பதிவில் online இல் pan card வாங்குவது என்று விளக்கி உள்ளேன். PAN card ஐ இரண்டு நிறுவனங்கள் தருகிறார்கள் . NSDL மற்றும் UTTSL ஆகிய நிறுவனங்கள் .இந்த இரு நிறுவனமும் மத்திய அரசு நிறுவனங்கள் . நான் இந்த பதிவில் NSDL நிறுவனத்தின் இணைய தளத்தின் மூலம் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம் . இதற்கு ஆகும் செலவு 96 ரூபாய் . இந்த linkஇல் சென்ற பிறகு ,இந்த வீடியோ வை பாருங்கள் .
ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.
இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?
ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.
Mutual Funds எனப்படும் பரஸ்பர நிதி இல் முதலீடு செய்வது எவ்வாறு என்று பார்ப்போம் .நிறைய வழிகளில் முதலீடு செய்யலாம். Mutual Fund நிறுவனங்களிடம் நேரிடயாக முதலீடு செய்வது. இந்த முறையில் நீங்கள் அருகில் இருக்கும் Mutual fund அலுவலகத்திற்கு சென்று , முதலீடு செய்ய வேண்டும் என்று சொன்னால் அவர்கள் உங்களுக்கு எவ்வாறு செய்வது என்று கூறுவார்கள் . அதிக பட்சம் Rs 100/- இல் உங்களுக்கு கணக்கை ஆரம்பித்து கொடுத்து விடுவார்கள் .அதன் பிறகு நீங்கள் எவ்வளவு தொகைக்கு முதலீடு செய்ய வேண்டுமோ அதை செலுத்த வேண்டும்.
நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்! நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி" அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக் கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.
வணக்கம் நண்பர்களே, NSE மற்றும் BSE இல் broker மூலியமாக பங்குச்சந்தை இல் பங்குகளை வாங்க விற்க முடியும். நம் நாட்டில் ஏக பட்ட stock brokers அதாவது பங்குசந்தை தரகர்கள் உள்ளார்கள்.இவற்றில் யாரை தேர்ந்தெடுப்பது பற்றி இப்போது பார்போம். யாராயும் குறிப்பிட்டு இவர் நல்லவர் என்று என்னால் கூற இயலாது, காரணம் எனக்கு நல்லவராக தெரியும் புரோக்கர் உங்களுக்கு சரி பட்டு வராதவராக இருக்கலாம். அதனால் ,எப்படி எதை வைத்து தேர்ந்தெடுக்கலாம்,என்பது பற்றி விலாவரியாக எழுதுகிறேன். நீங்கள் பங்குச்சந்தைக்கு புதியவராக இருந்தால் இதன் படி முடிவு எடுங்கள் அல்லது அனுபவம் பெற்ற வாரக இருந்தால், கிழே comment box இல் உங்களுடைய அனுபவத்தில் யார் சிறந்தவர் என்று எழுதுங்கள்,இது புதியவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். Technology facility : online trading facility :இணையத்தளம் மூலம் நீங்கள் பங்கை வாங்க விற்க வசதி இருக்கிறதா என்று பார்க்கவும். mobile trading : மொபைல் இல் இருந்து பங்கை வாங்க விற்கும் வசதி தருகிறார்களோ என்று பார்க்கவும் . call and trade :பங்குச்சந்தை தரகு நிறுவனத்தின் customer care ஐ அழைத்து இந்த பங்கை வாங்குங்கள் ,விற்று தாருங்கள் என்று கேட்கும் வசதி. இந்த வசதி எல்லோரிடமும் இருக்கும் .
ஏங்க நாம வாங்குற பங்கு மட்டும் ஏறவே மாட்டிங்குது , நாம வாங்கிட்டா அதுக்கு அப்புறம் ஒரே அடியா இறங்கிடுத்து . இன்னும் சிலபேர் , எவ்வளவு நல்ல பங்கா இருந்தாலும் சரி சொல்லு,நான் வாங்கின அப்புறம் பாரு ,என்ன நடக்குதுன்னு .. என்று இப்படி ஒரு பங்கின் தலை எழுத்தையே மாற்ற கூடிய வல்லமை நாம் அந்த பங்கை வாங்குவதா வேண்டாமா என்ற முடிவில் தான் இருக்கிறது என்று நாம் சொல்லி புலம்பி கொண்டிருப்போம் . சிரிக்காதிங்க !!!,நாமும் இப்படிதான் ஒரு நாள் புலம்பி இருப்போம் .
நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.
புல எண் (Survey Number) : ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.
நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன. 1. பதிவுத்துறை 2. வருவாய்த்துறை அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்