ஏங்க நாம வாங்குற பங்கு மட்டும் ஏறவே மாட்டிங்குது::பங்குச்சந்தை ரகசியங்கள்-3

  ஏங்க நாம வாங்குற பங்கு மட்டும் ஏறவே மாட்டிங்குது ,
நாம வாங்கிட்டா அதுக்கு அப்புறம் ஒரே அடியா இறங்கிடுத்து . இன்னும் சிலபேர் ,
எவ்வளவு நல்ல பங்கா இருந்தாலும் சரி சொல்லு,நான் வாங்கின அப்புறம் பாரு ,என்ன நடக்குதுன்னு ..
என்று இப்படி ஒரு பங்கின் தலை எழுத்தையே மாற்ற கூடிய வல்லமை நாம் அந்த பங்கை வாங்குவதா வேண்டாமா என்ற முடிவில் தான் இருக்கிறது என்று நாம் சொல்லி புலம்பி கொண்டிருப்போம் . 
சிரிக்காதிங்க !!!,நாமும் இப்படிதான் ஒரு நாள் புலம்பி இருப்போம் .

நிலம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்



நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள
வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள்
பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும்
போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற
விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

புல எண் (Survey Number) :
ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல
கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும்.
அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.

நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.
1. பதிவுத்துறை
2. வருவாய்த்துறை
அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்