சென்ற பதிவின் கேள்வியுடன் இன்றைய பதிவு....பொதுவாக தீபாவளி சமயத்தில் ,நிறைய பேர் வாகனம் வாங்குவது வாடிக்கை !!! அதனால் அதன் நிறுவனத்தின் பங்குகள் ஏறும் என்பது ஒரு கணிப்பு .ஆனால் சில auto பங்குகள் இறங்கும்..... இதற்கு நிறைய காரணங்கள் உண்டு . சில சமயம் அதன் பங்குகளின் விலை அளவுக்கு அதிகமாக வர்த்தகம் ஆகி கொண்டிருக்கும்.... தீபாவளி சமயத்தில் வாங்கி விற்றால் லாபம் குறைவாக கிடக்கும் என்று எண்ணி அதற்கு முன்பே அதன் பங்குகளை குறைந்த விலையில் நிறைய வாங்கி வைத்திருப்பார்கள்.. எல்லோரும் வாங்கும் பொது ,தனது பங்குகளை விற்று கொண்டு இருப்பார்கள் ....
வணக்கம் ,இந்த பதிவில் இருந்து ,பங்குச்சந்தை இல் எவ்வாறு லாபம் சம்பாதிப்பது,பங்கு வாங்குவதற்கு முன் என்ன என்ன கருத்தில் கொள்ள வேண்டும்.....மற்றும் எனது/ அனுபவங்கள் ஆகியவற்றை தொடராக எழுதலாம் என்று நினைக்கிறேன் ...... இந்த தொடரை எழுதுவதற்கு முன் எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை சொல்லி விடுகிறேன்.
வணக்கம் நண்பர்களே , இந்த பதிவு ஆரம்பித்து சரியாய் இன்றுடன் ஒரு வருடம் முடிந்துள்ளது .இந்த ஒரு வருடத்தில் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர் .....அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். .இந்த பதிவு தொடங்கியதின் நோக்கமே ,எல்லோருக்கும் பங்குச்சந்தை பற்றி அறிய வேண்டும் என்பதே....இதனுடன் mutual funds பற்றி எழுத நினைக்கிறன்........ உங்களுக்கு பங்குச்சந்தை பற்றி எந்த விதமான ,தகவல் பற்றி தெரிய வேண்டுமோ,அதனை இங்கு பின்னூட்டமாக எழுதுங்கள். என்னால் முடிந்தவரை இதை பற்றி எழுதுகிறேன் .
என்னுடைய வலை பதிவை படித்து ,ஆதரவளித்த அணித்து நண்பர்களுக்கும்,எனது நன்றிகள்... உங்கள் ஆசியுடன் ,பயணம் தொடரும் ....................